Wednesday, March 16, 2022

சிவனே

என்ன தருவேன் நான்

என்ன தருவேன் சிவனே (2)


என்னிடம் ஏதுமில்லை

என்று நினைத்தாயோ சிவனே... (2)



உன்னிடம் இல்லையென்று

என்னிடம் தேடினாயோ

உன்னைவிட்டு எங்கு சென்றேன் என்று நினைத்து நீ


என்ன தருவேன் நான்

என்ன தருவேன் சிவனே (2)


நீயின்றி நானுமில்லை

நானின்றி நீயாஇல்லை

சிவனே....சிவனே


என்னிடம் நானுமில்லை

உன்னிடம் சேரவில்லை

உன்னைவிட்டால் யாருமில்லை


என்ன தருவேன் நான்

என்ன தருவேன்  சிவனே (2)

என்னையன்றி.... நான்

என்ன தருவேன் சிவனே (2)




 





வரம்

நான்‌ நானாக

என்னை‌ நினைக்க 

ஒரு நாளாவது இல்லை

ஒரு‌‌ மணியாவது‌ இல்லை

ஒரு நிமிடமாவது‌ உன்னை நினையாதிருக்க வரம் தருவாயா

Tuesday, June 1, 2021

காயமே

காயமே அது பொய்யடா
காலம் மட்டும் மெய்யடா

நீயும் நானும் யாரடா
நினைத்து பாரு மானிடா

ஓடும் நீரில் நாமுமே
ஒழிந்து போகும் தூசிடா

காலம் போகும் வழியிலே
களைந்து போகும் நினைவடா

அன்பு என்று ஏதடா
அதையும் தாண்டி தேடடா

மறதிஅரு மருந்தடா
காலம் ஆற்றா காயமேதடா

பாசம் பொய்தான் பரிவும் பொய்தான்
வேசமெல்லாம் விட்டு பாரு
விலகும் இந்த நோயடா

உன்னை நீயும் உன்னில் தேடு
உண்மை புரியும் பாரடா

அஆ

நீ எந்தன் காதலுமில்லை

நான் உந்தன் தேடலுமில்லை

உள்ளம் மட்டும் என்னிடமில்லை



Friday, November 6, 2020

இதுவும் பழகும்.....

இதுவும் பழகும்.....

அடிக்கடி தொலைந்தேனோ
நீ என்னைத் தேடிட

தொலையத்தொலையத்தான்
தொலைகிறேன்
தேடிட யாருமின்றி

யாருக்கும் தெரியாமல்
நீயும் அறியாமல்
விலகி 
விழி நீரொடு நிற்கிறேன்

உனக்கென்ற உறவுகள்
உனக்கான ஆசைகள்
உனக்கான தேவைகள்

எனக்கென்று கூற
என்னவளும் நீயுமில்லை

என்னோடு வைத்துக்கொள்ள
என்மனமும் சிறையுமில்லை

செல் 
பறந்துசெல் 

காணவில்லை

அருகில் இருப்பினும்

தொலைவில் நிற்கிறாய்


எதுவும் எதுவும் உன்னிடம்

எதிர்பார்க்காத

தொலைவில் செல்கின்றேன்


கலைந்து போன மேகத்தை

காற்றில் தேடி 

அலைகின்றேன்


இறந்துபோன நெஞ்சத்தில் 

எதற்குச்சாயம் பூசுகின்றேன்?


கடந்துபோன அன்பையெல்லாம் 

கவிதையாக்கி பூட்டுகின்றேன்


விலகிப் போகும் உறவைத்தான் 

விரட்டி விரட்டி நேசித்தேன்


விட்டுச் சென்ற நினைவுகளைத்தான் 

விரக்தியோடு யாசித்தேன்


காலம் கடந்து சென்றாலும் 

கலையாமல் காத்திருப்பேன்

Friday, September 6, 2019

தேடியது


காலமெல்லாம் தேடியது
கடைசியில்
கண்ணெதிரே

அழைக்கவும் முடியாமல்
அணைக்கவும் முயலாமல்
மறக்கவும் துணியாமல்
இழக்கவும் இயலாமல்


மறுபடியும்
தேடலா? காலம்!?


இதுவும் கடந்து போகும்
கடந்தபின்