Friday, September 6, 2019

கனவே என் கனவே

விழியோரம் வழியும் நீரில்
உன் மின்னல் தோன்றுதே

உறங்காத இரவைப் போலே
என் நெஞ்சம் ஏங்குதே

என்அன்பு என்றும் என்றும்
மண்ணில் தான் சாகுமோ

வரம் தந்த தாயே நீயே
வந்தால்தான் தீருமோ
என் சாபம் போகுமோ

கனவே என் கனவே
கலையாமல் ஆகுமோ
நிஜமாகிப் போகுமோ

கலைந்தோடும் கனவில் தானே
உன் அன்பை காண்கிறேன்
நான் நானக  வாழ்கிறேன்

கலைந்தாலும் கனவைத்தானே
மறுமுறையும் காண்கிறேன்
நிஜத்தில்தான் தோற்கிறேன்





No comments:

Post a Comment