அருகில் இருப்பினும்
தொலைவில் நிற்கிறாய்
எதுவும் எதுவும் உன்னிடம்
எதிர்பார்க்காத
தொலைவில் செல்கின்றேன்
கலைந்து போன மேகத்தை
காற்றில் தேடி
அலைகின்றேன்
இறந்துபோன நெஞ்சத்தில்
எதற்குச்சாயம் பூசுகின்றேன்?
கடந்துபோன அன்பையெல்லாம்
கவிதையாக்கி பூட்டுகின்றேன்
விலகிப் போகும் உறவைத்தான்
விரட்டி விரட்டி நேசித்தேன்
விட்டுச் சென்ற நினைவுகளைத்தான்
விரக்தியோடு யாசித்தேன்
காலம் கடந்து சென்றாலும்
கலையாமல் காத்திருப்பேன்
No comments:
Post a Comment