Friday, November 6, 2020

காணவில்லை

அருகில் இருப்பினும்

தொலைவில் நிற்கிறாய்


எதுவும் எதுவும் உன்னிடம்

எதிர்பார்க்காத

தொலைவில் செல்கின்றேன்


கலைந்து போன மேகத்தை

காற்றில் தேடி 

அலைகின்றேன்


இறந்துபோன நெஞ்சத்தில் 

எதற்குச்சாயம் பூசுகின்றேன்?


கடந்துபோன அன்பையெல்லாம் 

கவிதையாக்கி பூட்டுகின்றேன்


விலகிப் போகும் உறவைத்தான் 

விரட்டி விரட்டி நேசித்தேன்


விட்டுச் சென்ற நினைவுகளைத்தான் 

விரக்தியோடு யாசித்தேன்


காலம் கடந்து சென்றாலும் 

கலையாமல் காத்திருப்பேன்

No comments:

Post a Comment