கொட்டிய பாசமெல்லாம்
கொட்டியதோ கண்ணீராய்....
நினைத்திருந்த நெஞ்சம்தான்
நீராலே குளித்ததுவோ
பாசம் என்ன
கண்ணீரைத்தானே
பரிசளிக்கும்
கண்ணீரில் கரையாதது
கும்பநீரில்தான் கரையுமோ
பேசாத வார்த்தைக்கும்
காணாத கண்களுக்கும்
மறக்காத மனதிற்கும்
இடையிலான போராட்டம்
அருவிபோல் கொட்டும்
அன்பிற்கா தடையிட்டாய்
வேடதாரிகள் மத்தியிலே
வேடிக்கையாய் நானெதற்கு
உன்னிடம் வேண்டாமல்
யாரிடம்தான் வேண்டுவேன்
உன்னை தேடாமல்
யாரைத்தான் தேடுவேன்
கொட்டியதோ கண்ணீராய்....
நினைத்திருந்த நெஞ்சம்தான்
நீராலே குளித்ததுவோ
பாசம் என்ன
கண்ணீரைத்தானே
பரிசளிக்கும்
கண்ணீரில் கரையாதது
கும்பநீரில்தான் கரையுமோ
பேசாத வார்த்தைக்கும்
காணாத கண்களுக்கும்
மறக்காத மனதிற்கும்
இடையிலான போராட்டம்
அருவிபோல் கொட்டும்
அன்பிற்கா தடையிட்டாய்
வேடதாரிகள் மத்தியிலே
வேடிக்கையாய் நானெதற்கு
உன்னிடம் வேண்டாமல்
யாரிடம்தான் வேண்டுவேன்
உன்னை தேடாமல்
யாரைத்தான் தேடுவேன்
No comments:
Post a Comment