Tuesday, June 1, 2021

காயமே

காயமே அது பொய்யடா
காலம் மட்டும் மெய்யடா

நீயும் நானும் யாரடா
நினைத்து பாரு மானிடா

ஓடும் நீரில் நாமுமே
ஒழிந்து போகும் தூசிடா

காலம் போகும் வழியிலே
களைந்து போகும் நினைவடா

அன்பு என்று ஏதடா
அதையும் தாண்டி தேடடா

மறதிஅரு மருந்தடா
காலம் ஆற்றா காயமேதடா

பாசம் பொய்தான் பரிவும் பொய்தான்
வேசமெல்லாம் விட்டு பாரு
விலகும் இந்த நோயடா

உன்னை நீயும் உன்னில் தேடு
உண்மை புரியும் பாரடா

No comments:

Post a Comment