காயமே அது பொய்யடா
காலம் மட்டும் மெய்யடா
காலம் மட்டும் மெய்யடா
நீயும் நானும் யாரடா
நினைத்து பாரு மானிடா
ஓடும் நீரில் நாமுமே
ஒழிந்து போகும் தூசிடா
காலம் போகும் வழியிலே
களைந்து போகும் நினைவடா
அன்பு என்று ஏதடா
அதையும் தாண்டி தேடடா
மறதிஅரு மருந்தடா
காலம் ஆற்றா காயமேதடா
பாசம் பொய்தான் பரிவும் பொய்தான்
வேசமெல்லாம் விட்டு பாரு
விலகும் இந்த நோயடா
உன்னை நீயும் உன்னில் தேடு
உண்மை புரியும் பாரடா
No comments:
Post a Comment