Thursday, May 10, 2018

யாரடி நீ எனக்கு

என்னவென்று
நானழைப்பேன் தோழியே

என்னவென்று
நானழைப்பேன்

உறவென்று ஏதுமில்லை
காதலில்லை
காமமில்லை
பாசத்திற்குப் பஞ்சமில்லை

கண்ணுக்குள்ளே கபடமில்லை
நெஞ்சுக்குள்ளே பொய்மையில்லை

அன்பிறைத்து அன்னையானாய
அன்புதேடி தங்கையானாய்

காயத்திற்கு களிம்பானாய்
கவலைக்கு தோளானாய்
தவறுக்கு குருவானாய்
தோள்தாங்கி தோழியானாய்

என்னவென்று
நானழைப்பேன் தோழியே

No comments:

Post a Comment