Thursday, May 10, 2018

ஆ ராரோ - தாலாட்டு

ஆ  ராரோ ஆரி ராரோ ஆரி ராராரோ
ராரி ராராரோ ராரிராராரோ ராரிராராரோ

எந்தன் பாடல் நீயும் கேட்டு
மெல்ல தூங்காயோ

எந்தன் மடியில் நீயும் தூங்க
என்ன செய்வேனோ

மனதிலுள்ள கவலை நீங்க
மடியில் நீ தூங்கு  (ஆரா)

நெஞ்சிலுள்ள பாசமெல்லாம்
நிலைக்க வேண்டுமம்மா

எஞ்சியுள்ள காலமெல்லாம்
என்னருகில் வேண்டுமம்மா (ஆரா)

உன்னை நானும் தூங்க வைத்து
அன்னையானேனோ

என்னை இங்கு தூங்க வைக்க
வந்த தாய்தானோ (ஆரா)

No comments:

Post a Comment