Wednesday, May 9, 2018

என் தோழியே..

தோழியே..

என்ன கேட்டேன்
உன்னிடம்
நான் என்ன கேட்டேன்

அதுவும் தவறென்றால்
என்ன செய்வேன் நான்
என்ன செய்வேன்

இருக்கவும் கூடாதென்றாய்
விலகவும் வேண்டாமென்றாய்

கணவனாய் இருந்திருந்தால்
கால்கட்டை அவிழ்த்திருப்பேன்

காதலனாய் இருந்திருந்தால்
காணாமல் போயிருப்பேன்

நண்பனாய் ஆனாதினால்
நானாகி நிற்கின்றேன்

மறக்காத நெஞ்சத்தை
அனுதினமும் வேண்டவைத்தாய்

நானறியா என் மனதை
என்னிடமே அறிய வைத்தாய்

ஆயிரம் இருப்பினுமே
தோழி- நீ இருப்பாய்

தனையறியா சிசுவிற்கும் தாயின் புரிதல் போல்
உனக்கும் எனக்குமாய்

அன்னையாய் அணைத்தவளே
ஆருயிராய் இருப்பவளே
பிழைகளைதான் பொறுப்பவளே

தண்டனைகள் தந்தே நீயே
தந்தையாய் ஆனாவளே

ஆராத வடுக்கலுக்கு
அருமருந்தாய் இருப்பவளே

அழியாத நினவுகளை
அன்பாலே கொடுத்தவளே

தீராத பாசத்தை
திமிர் கலந்து தருபவளே

தாயுமாய் தந்தையாய்
தங்கையாய் தோழியாய்...

அன்பைத்தானே தேடுகிறேன்
அத்துனையும் தந்துவிடு


No comments:

Post a Comment