Tuesday, July 17, 2018

தாயே...

உந்தன் பாசம்
உந்தன் நேசம்
எல்லாம்
எல்லாம்
எனக்கே வேண்டும்

கை தொடும் தூரம்
கண் தொடும் தூரம்
காலமெல்லாம் நீ
வேண்டும் தாயே

கண்கள் நனையும்
கண்ணிரை கேட்டால்
அதுவும் காட்டும்
உன் மீது பாசம்

உன்னை நினைக்கும்
உன்னை நினைக்கும்
நெஞ்சை
ஒருமுறை
நினைத்திடு தாயே

உந்தன் மடியில்
ஒரு நாள் துயில
வரம்ஒன்று தந்தால்
வாழ்வேன் தாயே

நான் கொண்ட பாசம்
நான் கொண்ட கோபம்
என்றும்
என்றும்
உனைத்தானே தேடும்

உன்னை அணைத்திட
உள்ளம் ஏங்கும்
ஒரு பொழுதும் இங்கு
வழியில்லை தாயே..


No comments:

Post a Comment