Tuesday, January 29, 2019

வலியும் பழகும் ஓர் நாள்

வலியும்
வலியும்
பழகும் ஓர் நாள்

வலியில்லாத 
நாளே வருமோ?

மடமை கொள்ளாய்
மனமே கொல்லாய்

ஏக்கம் உண்டேல்
தாக்கம் உண்டு

பாசம் உண்டேல்
காயம் உண்டு

எதிர்பார்த்தல் கொண்டால்
ஏமாற்றம் விடுமோ?


யாருமில்லா தனிமரமாய்
என் மொழியும்
என் வலியும்
என் வழியுமாய்

நானும் நானுமாய்
என் அன்பில் மட்டுமாய்

எதிர்பார்பில்லா தனி உலகம்




No comments:

Post a Comment